மட்டக்களப்பில் தொடரூந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த தொடருந்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (25.03.23) தொடருந்து கடவையினை மறித்து மக்கள் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். சுவிஸ்கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை தொடருந்து கடவையினை கடக்கும் வீதி பகுதியினை தொடருந்து நிலைய ஊழியர்கள் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதியை தடை செய்தனர். இதனையடுத்து இந்த வீதிதடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபிரதேச மக்கள் ஒன்றினைந்து தொடருந்து கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். … Continue reading மட்டக்களப்பில் தொடரூந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!